முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்த வலைப்பூவைப் பற்றி...

இந்த வலைப்பதிவில் நிதி சுதந்திரத்தை நோக்கிய எனது பயணத்தில் நான் கற்றுக்கொண்டதை பதிவிட்டு வருகிறேன். 

பங்குச்சந்தையைப் பற்றியும் நிதிச்சுதந்திரத்தை பற்றியும் படிக்க ஆரம்பித்த காலத்தில் அவற்றைப்பற்றி தமிழில் மிகக்குறைந்த அளவிலேயே வலைதளங்களில் கிடைத்தன. ஆங்கில வலைதளத்தில் கிடைக்கும் தரத்திலும் என்னைப்போன்ற சாமானியனுக்கு எளிதில் புரியும் வகையிலும் தமிழ் வலைப்பக்கங்களில் அரிதாகவே இருந்தது.

என்னுடைய பணிச்சூழல் காரணமாக அதிக நேரம் புத்தகங்களையும் படிக்க முடியவில்லை. ஆனாலும் அறிவு என்ற ஆயுதம் இல்லாமல் பங்குச்சந்தையில் பிழைக்க முடியாது. டுவிட்டர், யுடியூப் போன்ற சமூக ஊடகங்களிலும் பல வலைப்பக்கங்களையும் படித்து கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி வருகிறேன்.

பங்குச்சந்தை, தனிநபர் நிதிக்கொள்கைகள் பற்றிய நிறைய ஆங்கில புத்தகங்கள் என்னைப்போன்ற சாமான்ய மனிதனுக்கு மிகவும் கடினமனமாக இருந்தது. 

இந்த பயணத்தில் பணத்தையும் முதலீடுகளை பற்றியுமான  என்னுடைய பல நம்பிக்கைகள் தலைகீழாக மாறின. பணத்தை பற்றி இதுவரை இந்த சமூகம் கற்றுத்தந்தவைகள் எல்லாம் சிதறின. 

ஒரு சராசரியான குடும்பத்தில் பிறந்து மாதச்சம்பளம் பெறும் சாமானியனான என்னுடைய நிதிச்சுதந்திரத்தை நோக்கிய பயணத்தில் நான் படித்து அனுபவித்து கற்றுக்கொண்ட விடயங்களை தொடர்ந்து இங்கு பதிவிட இருக்கிறேன். 

பங்குச்சந்தையில் பல வழிகளில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். தின வர்த்தகம், குறுகிய கால வர்த்தகம், நீண்ட கால முதலீடு, மற்றும்  டிரைவேட்டிவ்ஸ் எனப்படும் ஊகத்தினாலான முதலீடுகள். இவற்றிற்கான முதலீடுகள், ஆபத்துகள் (risks), வருமானம், திறமை, அறிவு, மற்றும் மனநிலை வேறுவேறானவை ஆகும். இப்பதிவில் நீண்ட கால முதலீடுகளை பற்றி மட்டுமே பதிவிட இருக்கிறேன்.

வேலைக்கு சென்று மாத வருமானம் பெரும் சராசரி மனிதனுக்கு பரஸ்பர நிதி மற்றும் நல்ல நிறுவனப்பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதே சரி என்பது என் எண்ணம். மற்றவைகளில் ஆபத்து அதிகம்; நேரமும் அதிகம் தேவை; முதலைவிட அதிக நட்டம் அடையும் ஆபத்தும் உண்டு. நேரடியாக பங்குகளைப்பற்றி அறிந்து கொள்ள நேரமில்லாதவர்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம்.

வாருங்கள். நீண்ட கால முதலீடுகள், தனிநபர் நிதி, பணம் ஆகியவற்றின் கொள்கைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

COMMON SENSE INVESTING

 Common sense investing. Simplicity is the ultimate sophistication - Leonardo da Vinci. Investing legend Charles D Ellis said the process of investment is like a game of amateur tennis, where the winner is the one who makes the fewest mistakes.  In investing, outcomes are determined not by the great strategy and exceptional execution by the winner. Rather, they are the result of losers’ mistakes rather than the winner’s proficiency.  He says the investment process can be termed as a “loser’s game” in which mistakes and unforced errors can cause investors t o fall behind their peers. This is especially true for an amateur investor like me. As a retail investor who has less time, domain knowledge and analytical capabilities, competing  with professional investors is not an easy task. Like anyone else i have learnt my lessons the hard way in the market. As my inversing thought process evolved over last few years, i will try to put my investing thought process into a fra...

பணம் எவ்வாறு செயல்படுகிறது?

பணம் என்றால் என்ன? பணம் என்பது இரு நபர்களுக்கு இடையே நடக்கும் மதிப்பு பரிமாற்றத்திற்கான ஒரு ஊடகம். மேலும் மதிப்பை சேர்த்து வைக்கும் பெட்டகம் ஆகும்.  பணம் என்பது மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள் மற்றும் சேவைகள் முதலியவற்றை பரிமாறிக்கொள்ள ஒரு அரசால் உறுதியளிக்கப்பட்ட அலகு ஆகும். பணத்திற்கு என்று தனியாக மதிப்பு கிடையாது. மக்களுக்கு அரசின் மீதிருக்கும் நம்பிக்கையே பணத்திற்கு மதிப்பை அளிக்கிறது.  முற்காலத்தில் மனிதர்கள் தங்களுக்குள் பொருட்களை பரிமாறி கொள்ள பண்டமாற்று முறையை பயன்படுத்தினர். அதில் பல சிக்கல்கள் இருந்தன. பின்னர் உப்பு, சிப்பி போன்றவற்றை பணத்தை போல் பயன்படுத்தினர். பின்னர் கிமு 600 களில் நாணயங்கள் புழக்ககத்திற்கு வந்தன. தமிழ்நாட்டிலும் பாண்டியர்கள் காலத்தில் பயன்படுத்திய உலோகத்திலான நாணயங்கள் கிடைத்துள்ளன. முதலில் பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தின் மதிப்பைக் கொண்டு மதிப்பிடப்பட்டது. தங்க நாணயங்கள் அதன் எடைக்கு ஈடாக மதிப்பிடப்பட்டது. இதனை பண்டமாற்று முறையின் நீட்சியாக பார்க்கலாம்.  அதற்கு பின்னர் அரசாங்கங்கள்  உலோகங்களை ந...

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் - ஜார்ஜ் எஸ். க்லேசன் - புத்தக சுறுக்கம் 1926 ல் எழுதப்பட்ட இந்த புத்தகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனில் நடக்கும் நிகழ்வுகளை உவமையாகக் கொண்டு நிதி ஆலோசனைகளை வழங்குகிறது. இன்றளவும் தனிநபர் நிதிக்கொள்கையின் உன்னதமான புத்தகமாக கருதப்படுகிறது.   இதில் உள்ள ஆலோசனைகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்  இருந்ததைப்போல இன்றைய காலகட்டத்திற்கும் முற்றிலும் ஏற்றயே. எக்காலத்திலும் செல்வத்தை வரையறுக்கும் கொள்கைகளை எளிதாக விளக்கும் இந்த புத்தகத்தை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். பணத்தை கையகப்படுத்தும் எளிய விதிகளை புரிந்து கொள்பவர்களிடம் பணம் ஏராளம் சேர்கிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வளமான பாபிலோனில் பணத்தை கட்டுப்படுத்திய அதே விதிகள் இன்றும் பணத்தை இயங்குகின்றன. 1. நீங்கள் சம்பாதிக்கும் ஒரு பகுதியை உங்களுக்கென்று ஒதுக்குங்கள். அது உங்கள் ஊதியத்தில் பத்து சதவிகத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும்.  ஏன்? என் வருமானம் எல்லாம் எனக்குதானே? ஒரு பகுதி மட்டும் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? நம் வருமானத்தில் வாடகை கொடுக்கிறோம், காய்கறி, மளிகை கடை என எல்...