முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பணம் உண்மையிலேயே எல்லா தீமைகளுக்கும் மூல காரணமா?



சிறுவயது முதல் பணம்தான் எல்லா தீமைகளுக்கும் மூலகாரணம் என்று நம் சமூகம் சொல்லி வளர்க்கிறது. பணத்தை பற்றி பேசுவது ஆசைப்படுவது எல்லாம் தவறு என்று நம் மனதில் திணிக்கப்படுகிறது. மற்றவரை ஏய்த்து மோசடி செய்தால் மட்டுமே செல்வந்தராக முடியும் என்றும் நியாயமான முறையில் பணக்காரராக முடியாது என்றும் நாமும் நம்புகிறோம். இது உண்மையா?

 

காற்றை பற்றி சிந்தியுங்கள். இவ்வுலகில் ஏராளம் உள்ளது. ஒவ்வொரு நொடியும் நாம் காற்றை சுவாசிக்கின்றோம். ஆனால். நமக்கு காற்று எளிதில் கிடைப்பதால் அதை பற்றி எப்போதும் சிந்திப்பதில்லை. அதுவே நீங்கள் நீரில் மூழ்கினால் காற்றை பற்றி மட்டுமே சிந்திப்பீர்கள். பணமும் அதை போலத்தான்நம்முடைய தேவைகளுக்கான பணம் நம்மிடம் இல்லாதபோது பணத்தை பற்றி மட்டுமே சிந்திக்க நேரிடும். அந்த நேரத்தில் பணமே நமது மனதை முழுவதும் ஆக்கிரமிக்கிறது. பணமின்மை மற்ற விடயங்களில் கவனம் செலுத்துவதற்கான திறனை கட்டுப்படுத்துகிறது. பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தும் சுதந்திரத்தை பணம் நமக்கு அளிக்கிறது

 

பொருள் சார்ந்த இந்த உலகில் பணம் உங்களுக்கு சுதந்திரத்தை வழங்குகிறது. பணம் உங்களுக்கு மகிழ்ச்சியை தரப்போவதில்லை. உங்கள் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க போவதில்லை. உங்கள் வெளிப்புற பிரச்சினைகளை மட்டும் தீர்க்கும்ஆராய்ந்து பார்த்தால் நமக்காக செல்வத்தை உருவாக்குவது நியாயமான விடயமே.

 

Money can't buy happiness. But lack of money  certainly buys misery - Daniel kahneman.

 

பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது. ஆனால் பணப் பற்றாக்குறை நிச்சயமாக துயரத்தை வாங்கும் - டேனியல் கேன்மென்.

இது முற்றிலும் உண்மை. பணம் மகிழ்ச்சியை தராது. பணம் பணப் பிரச்சனைகளை மட்டுமே தீர்க்கும். பணம் உங்கள் பாதுகாப்பின்மைகளை தீர்க்காது. பணத்தை கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது. இரண்டுக்கும் முடிச்சு போடாதீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது ஒரு முடிவு அல்ல. மகிழ்ச்சி என்பது ஒரு வாழ்க்கை பயணம்

 

சரி எவ்வளவு பணம் போதுமானது? இந்த கேள்விக்கு நீங்கள் மட்டுமே பதில் அளிக்க முடியும். எது தேவை எது ஆசை என்பதை வரையறுத்துக் கொள்ளுங்கள். ஆசைகளுக்கு அளவே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மரணப்படுக்கையில் நாம் சம்பாதித்த பணத்தை பற்றி ஒருபோதும் நினைக்கப்போவதில்லை. நண்பர்கள், உறவினர்களுடன் சந்தோஷமாக கழித்த நிமிடங்கள், பிறருக்கு உதவிய தருணங்கள் இவையே வாழ்வின் இறுதியில் மனநிறைவைத் தரும்

 

பணம் என்பது ஒரு முடிவுக்கான வழிமுறை ஆகும். அதுவே ஒரு முடிவல்ல. திருப்தியான வாழ்க்கை வாழ்வதே மகிழ்ச்சிக்கான திறவுகோல். வாரன் பஃபெட் கூறுகையில் நம்முடைய எண்ணத்திற்கேற்ப வாழ வேண்டும்; பிறர் என்ன நினைக்கிறார்கள் எனணக் கூடாது. பிறரின் பார்வைக்காக நாம் வாழ்பவர் ஒருபோதும் செல்வந்தராக முடியாது. எனவே எப்படி பணக்காரன் ஆவது என்று சிந்திப்பதற்கு முன் எப்படி வாழ வேண்டும் என்று சிந்தியுங்கள்.

 

அதிக பணம் சம்பாதித்தால் நிறைய மகிழ்ச்சி கிடைக்கும் என்பது முட்டாள்தனம். பணத்தை பற்றி மட்டுமே நினைப்பதைக் காட்டிலும் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விடயங்களை பற்றி சிந்தியுங்கள். பிறகு அந்த விடயங்களில் பங்கேற்க போதுமான பணத்தை மட்டும் சம்பாதியுங்கள். அதற்கு மேல் பணத்தை சம்பாதிப்பது நமக்கு உள்ள புதிப்பிக்க முடியாத வளத்தை வீணடிப்பதாகும் - அது இந்த உலகத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள நேரம். உங்கள் எல்லாத் தேவைகளுக்கும் நியாயமான ஆசைகளுக்கும் வேண்டிய பணம் உங்களிடம் இருந்தால் அதற்கு மேல் பணம் சம்பாதிக்க முயல்வது மேலும் கவலையைத் தருமொழிய அவற்றை போக்காது.

 

செல்வம் பூஜ்ய கணக்கு விளையாட்டு அல்ல. பூஜ்ய தொகை கணக்கு என்றால் இவ்வுலகில் குறிப்பிட்ட அளவே செல்வம் உள்ளது; அதனால் ஒருவர் பணக்காரன் ஆக இன்னொருவரிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே பூஜ்ய தொகை கணக்கு. ஆனால் அது உண்மை இல்லைஇந்த உலகில் உள்ள செல்வம் அனைத்தும் அளவிடக்கூடியவை மற்றும் நிலையான எண்ணிக்கையிலானவை என்ற தவறான பார்வை இங்கு பரவலாக உள்ளது. உலகில் செல்வம் நிலையானது அல்ல. காலப்போக்கில் செல்வம் தொடர்ந்து உருவாக்கபட்டும் அழிக்கப்பட்டும் வருகிறது. இங்கு ஒருவரின் ஆதாயம் இன்னொருவரின் இழப்பு அல்ல.  செல்வம் எல்லோரும் வெற்றி பெறக்கூடிய விளையாட்டு ஆகும்

 

இன்னொருவரை ஏமாற்றி மோசடி செய்தால்தான் பணக்காரனாக முடியும் என நம் சமூகம் நமக்கு சொல்லி வளர்க்கின்றது. பணக்காரர்கள் மோசமானவர்கள். அதனால் பணத்தாசை கொள்ள வேண்டாம் என நம்மை வளர்க்கிறார்கள். உண்மையில் பணம் தவறானதோ தீமையானதோ இல்லை. பணம் நடுநிலையானது. நேர்மையான வழியில் சட்டத்திற்குட்பட்டு பெரும் செல்வத்தை உருவாக்க முடியும்.

 

எல்லா மனிதர்களும் தங்களுக்குள் பிறரை பாதிக்கக்கூடிய திறமைகளை இயற்கையிலேயே கொண்டுள்ளனர். அந்த திறமையை கொண்டு மனித குலத்திற்கு நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முயல வேண்டும். நமது எளிமையான செயல்களின் மூலம் பிறரின் வாழ்க்கையை மேம்படுத்தி நம் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும் வெற்றிகனமானதாகவும் அமையும் வாய்ப்பை அதிகரிக்க முடியும்

 

பணம் என்பது ஒப்பீட்டுச் சொல். இருக்க வீடு இல்லாதவர்களுக்கு குடிசையில் இருப்பவர் பணக்காரர். குடிசையில் இருப்பவருக்கு கான்கிரீட் வீட்டில் வசிப்பவர் பணக்காரர். அவருக்கு இன்னொருவர் பணக்காரர். இதற்கு முடிவே இல்லை. எவ்வளவு பணம் உங்களுடைய வாழ்க்கைக்குத் தேவை என்பதை நீங்கள்தான் வரையறுத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் எங்கும் நகராத டிரெட்மில்லில் ஒடுவதைப்போல் நிம்மதி இல்லாமல் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

 

எவ்வளவு தேவை என்பது உங்கள் பார்வையைப் பொறுத்தது. பணம் அதிகம் இருப்பதைவிட உங்கள் விருப்பத்திற்கேற்ப செலவிட நேரம் இருப்பதே முக்கியம். பணத்தால் நிரந்தரமான மகிழ்ச்சியை வாங்க முடியாது. ஆனால் பணம் உங்களுக்கு சுதந்திரத்தை வாங்கித் தரும். அந்த சுதந்திரம் நிலையானது.

 

பணம் உண்மையிலேயே எல்லா தீமைகளுக்கும் மூல காரணமா? இல்லை பணத்தின் மீதான எல்லையற்ற காதலே எல்லா தீமைகளுக்கும் மூல காரணம்.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

COMMON SENSE INVESTING

 Common sense investing. Simplicity is the ultimate sophistication - Leonardo da Vinci. Investing legend Charles D Ellis said the process of investment is like a game of amateur tennis, where the winner is the one who makes the fewest mistakes.  In investing, outcomes are determined not by the great strategy and exceptional execution by the winner. Rather, they are the result of losers’ mistakes rather than the winner’s proficiency.  He says the investment process can be termed as a “loser’s game” in which mistakes and unforced errors can cause investors t o fall behind their peers. This is especially true for an amateur investor like me. As a retail investor who has less time, domain knowledge and analytical capabilities, competing  with professional investors is not an easy task. Like anyone else i have learnt my lessons the hard way in the market. As my inversing thought process evolved over last few years, i will try to put my investing thought process into a fra...

பணம் எவ்வாறு செயல்படுகிறது?

பணம் என்றால் என்ன? பணம் என்பது இரு நபர்களுக்கு இடையே நடக்கும் மதிப்பு பரிமாற்றத்திற்கான ஒரு ஊடகம். மேலும் மதிப்பை சேர்த்து வைக்கும் பெட்டகம் ஆகும்.  பணம் என்பது மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள் மற்றும் சேவைகள் முதலியவற்றை பரிமாறிக்கொள்ள ஒரு அரசால் உறுதியளிக்கப்பட்ட அலகு ஆகும். பணத்திற்கு என்று தனியாக மதிப்பு கிடையாது. மக்களுக்கு அரசின் மீதிருக்கும் நம்பிக்கையே பணத்திற்கு மதிப்பை அளிக்கிறது.  முற்காலத்தில் மனிதர்கள் தங்களுக்குள் பொருட்களை பரிமாறி கொள்ள பண்டமாற்று முறையை பயன்படுத்தினர். அதில் பல சிக்கல்கள் இருந்தன. பின்னர் உப்பு, சிப்பி போன்றவற்றை பணத்தை போல் பயன்படுத்தினர். பின்னர் கிமு 600 களில் நாணயங்கள் புழக்ககத்திற்கு வந்தன. தமிழ்நாட்டிலும் பாண்டியர்கள் காலத்தில் பயன்படுத்திய உலோகத்திலான நாணயங்கள் கிடைத்துள்ளன. முதலில் பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தின் மதிப்பைக் கொண்டு மதிப்பிடப்பட்டது. தங்க நாணயங்கள் அதன் எடைக்கு ஈடாக மதிப்பிடப்பட்டது. இதனை பண்டமாற்று முறையின் நீட்சியாக பார்க்கலாம்.  அதற்கு பின்னர் அரசாங்கங்கள்  உலோகங்களை ந...

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் - ஜார்ஜ் எஸ். க்லேசன் - புத்தக சுறுக்கம் 1926 ல் எழுதப்பட்ட இந்த புத்தகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனில் நடக்கும் நிகழ்வுகளை உவமையாகக் கொண்டு நிதி ஆலோசனைகளை வழங்குகிறது. இன்றளவும் தனிநபர் நிதிக்கொள்கையின் உன்னதமான புத்தகமாக கருதப்படுகிறது.   இதில் உள்ள ஆலோசனைகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்  இருந்ததைப்போல இன்றைய காலகட்டத்திற்கும் முற்றிலும் ஏற்றயே. எக்காலத்திலும் செல்வத்தை வரையறுக்கும் கொள்கைகளை எளிதாக விளக்கும் இந்த புத்தகத்தை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். பணத்தை கையகப்படுத்தும் எளிய விதிகளை புரிந்து கொள்பவர்களிடம் பணம் ஏராளம் சேர்கிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வளமான பாபிலோனில் பணத்தை கட்டுப்படுத்திய அதே விதிகள் இன்றும் பணத்தை இயங்குகின்றன. 1. நீங்கள் சம்பாதிக்கும் ஒரு பகுதியை உங்களுக்கென்று ஒதுக்குங்கள். அது உங்கள் ஊதியத்தில் பத்து சதவிகத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும்.  ஏன்? என் வருமானம் எல்லாம் எனக்குதானே? ஒரு பகுதி மட்டும் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? நம் வருமானத்தில் வாடகை கொடுக்கிறோம், காய்கறி, மளிகை கடை என எல்...